நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கருப்பு' திரைப்படம், வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து வருகிறது. கடந்த மே மாதம் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும், ரசிகர்களின் ஆதரவால் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து சாதனை படைத்து வருகிறது.
கருப்பு சாமியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, இந்திரன்ஸ், அனாகா மற்றும் ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் முதல் நாளிலிருந்தே உலகளாவிய வசூலில் சிறப்பான முன்னேற்றத்தை காட்டி வருகிறது. தற்போது 27 நாட்களைக் கடந்தும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், திரைப்படத்தின் வசூல் மற்றும் லாபம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, திரையரங்கு வசூல் மற்றும் விநியோக வருவாய் மூலம் 'கருப்பு' திரைப்படம் இதுவரை 80 கோடி ரூபாய்க்கும் அதிகமான லாபத்தை ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக லாபம் ஈட்டிய திரைப்படங்களில் ஒன்றாக 'கருப்பு' இடம்பிடித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வசூல் வேட்டையில் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் இந்த திரைப்படம், சூர்யாவின் திரையுலக வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக