BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஈரானில் மீண்டும் தாக்குதல் தொடங்கிய அமெரிக்கா! தீவிரமடையும் மத்திய கிழக்கு பதற்றம்

ஈரானில் மீண்டும் தாக்குதல் தொடங்கிய அமெரிக்கா! தீவிரமடையும் மத்திய கிழக்கு பதற்றம்

ஈரானுக்கு எதிரான தனது இராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் முன்னெடுத்து வருவதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) அறிவித்துள்ளது. ஈரானின் தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ள நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நேரடி உத்தரவின் பேரில் பல்வேறு முக்கிய இலக்குகள் மீது இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஈரான் அமைதி உடன்படிக்கைக்கு வர மறுப்பதே கூடுதல் இராணுவ நடவடிக்கைகளுக்கான முக்கிய காரணம் என அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையில், தெற்கு ஈரானில் ஹோர்முஸ் நீரிணைக்கு அண்மையில் அமைந்துள்ள மினாப் மற்றும் சிரிக் பகுதிகளில் அதிகாலை நேரத்தில் பல ஏவுகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றதாக ஈரானிய அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதல்களுக்கு பின்னால் அமெரிக்கா இருப்பதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏற்கனவே நீடித்து வரும் அமெரிக்கா - ஈரான் மோதல் புதிய கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்த தாக்குதல்கள் பிராந்திய பாதுகாப்பு மற்றும் உலக பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சம் சர்வதேச அளவில் அதிகரித்துள்ளது. குறிப்பாக ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படக்கூடும் என்ற கவலை உலக நாடுகள் மத்தியில் நிலவுகிறது.

மோதல் மேலும் தீவிரமடையும் பட்சத்தில், மத்திய கிழக்கு பிராந்தியத்தின் அரசியல் மற்றும் பாதுகாப்பு நிலைமைகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என சர்வதேச ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"