BREAKING
16 வயதிற்கு உட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? கனடாவில் புதிய சட்டமூலம் தாக்கல் பல்கலைக்கழக மாணவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது! சம்மாந்துறையில் அதிர்ச்சி சம்பவம் திருமண வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றிய போலி STF அதிகாரி கைது! AI புகைப்படங்களும் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் சுரேஷ் சலே விவகாரம் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பு செய்தி! இலங்கை அரசியல் களத்தில் தீவிரம் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை கோரிக்கை? CIDக்கு நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு 16 வயதிற்கு உட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? கனடாவில் புதிய சட்டமூலம் தாக்கல் பல்கலைக்கழக மாணவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது! சம்மாந்துறையில் அதிர்ச்சி சம்பவம் திருமண வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றிய போலி STF அதிகாரி கைது! AI புகைப்படங்களும் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் சுரேஷ் சலே விவகாரம் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பு செய்தி! இலங்கை அரசியல் களத்தில் தீவிரம் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை கோரிக்கை? CIDக்கு நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

சஹ்ரான் கும்பலுக்கு சம்பளம் வழங்கியதாக சலே மீது சரத் பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு!

சஹ்ரான் கும்பலுக்கு சம்பளம் வழங்கியதாக சலே மீது சரத் பொன்சேகா பரபரப்பு குற்றச்சாட்டு!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோருக்கு சுரேஷ் சலே சம்பளம் வழங்கியதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் நேரடி அனுமதி மற்றும் அறிவுறுத்தலின் கீழ் இடம்பெற்றதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சுரேஷ் சலே ஒரு இராணுவ அதிகாரி என்பதை விட கோட்டாபய ராஜபக்சவின் நெருங்கிய நம்பிக்கைக்குரிய நபராக செயற்பட்டதாகவும், அவரது அனுமதியின்றி எந்த முக்கிய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தான் இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் சுரேஷ் சலேவை புலனாய்வுப் பிரிவு பதவிகளில் இருந்து நீக்கியிருந்த போதிலும், பின்னர் அவர் பாதுகாப்பு அமைச்சின் கீழ் மீண்டும் இணைக்கப்பட்டதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தற்போது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவகாரம் மீண்டும் தேசிய கவனத்தை ஈர்த்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"