BREAKING
16 வயதிற்கு உட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? கனடாவில் புதிய சட்டமூலம் தாக்கல் பல்கலைக்கழக மாணவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது! சம்மாந்துறையில் அதிர்ச்சி சம்பவம் திருமண வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றிய போலி STF அதிகாரி கைது! AI புகைப்படங்களும் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் சுரேஷ் சலே விவகாரம் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பு செய்தி! இலங்கை அரசியல் களத்தில் தீவிரம் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை கோரிக்கை? CIDக்கு நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு 16 வயதிற்கு உட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை? கனடாவில் புதிய சட்டமூலம் தாக்கல் பல்கலைக்கழக மாணவருக்கு போதைப்பொருள் விற்பனை செய்த தம்பதி கைது! சம்மாந்துறையில் அதிர்ச்சி சம்பவம் திருமண வாக்குறுதி அளித்து பெண்களை ஏமாற்றிய போலி STF அதிகாரி கைது! AI புகைப்படங்களும் பயன்படுத்திய அதிர்ச்சி தகவல் சுரேஷ் சலே விவகாரம் குறித்து சர்வதேச ஊடகங்களில் பரபரப்பு செய்தி! இலங்கை அரசியல் களத்தில் தீவிரம் பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச பிடியாணை கோரிக்கை? CIDக்கு நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவு

தமிழ் சினிமாவின் சகாப்தம் முடிந்தது; இயக்குனர் இமயம் பாரதிராஜா வயதில் காலமானார்

தமிழ் சினிமாவின் சகாப்தம் முடிந்தது; இயக்குனர் இமயம் பாரதிராஜா வயதில் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவராக போற்றப்படும் இயக்குனர் இமயம் பாரதிராஜா, உடல்நலக் குறைவு காரணமாக தனது 84வது வயதில் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கே ஈடுசெய்ய முடியாத இழப்பாகக் கருதப்படுவதுடன், திரையுலகினரையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

1977ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பாரதிராஜா, கிராமிய வாழ்க்கையையும் இயற்கை சார்ந்த கதைகளையும் தமிழ் சினிமாவில் புதிய கோணத்தில் அறிமுகப்படுத்தியவர். “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “அலைகள் ஓய்வதில்லை”, “முதல் மரியாதை”, “கருத்தம்மா” உள்ளிட்ட பல திரைப்படங்கள் தமிழ் சினிமாவின் வரலாற்றில் அழியாத தடம் பதித்துள்ளன.

என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது தனித்துவமான வரவேற்பு வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அவரது அடையாளமாகவும் மாறியது. திரைப்பட இயக்குனராக மட்டுமல்லாமல், பின்னர் பல திரைப்படங்களில் குணச்சித்திர நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார்.

இந்திய அரசின் உயரிய பத்மஸ்ரீ விருது உட்பட பல தேசிய மற்றும் மாநில விருதுகளை பெற்றுள்ள பாரதிராஜா, தமிழ் திரைப்படத் துறையில் புதிய தலைமுறை இயக்குனர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை அவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது மறைவுக்கு திரைப்பட கலைஞர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"