BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் சில நகரங்களுக்கு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் மிதமான நிலையில் சில நகரங்களுக்கு எச்சரிக்கை

கடந்த 24 மணிநேரத்தில் இலங்கையின் முக்கிய நகரங்களில் காற்றின் தரம் பெரும்பாலும் மிதமான மட்டத்திலேயே காணப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், எதிர்வரும் நாட்களில் சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமடையக்கூடும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட சுற்றுப்புற காற்றின் தர அறிவிப்பின்படி, பெரும்பாலான நகர்ப்புறங்களில் நுண் துகள்களின் (PM2.5) அளவு மிதமான மட்டத்தில் பதிவாகியுள்ளது. அதேவேளை, வவுனியா, நுவரெலியா, எம்பிலிபிட்டிய, திருகோணமலை, முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் சீரான நிலையில் காணப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணிநேரத்திற்கான முன்னறிவிப்பின்படி, யாழ்ப்பாணம் மற்றும் புத்தளம் உள்ளிட்ட பல நகரங்களில் காற்றின் தரம் மிதமான அல்லது சற்று ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லை தாண்டிய காற்று மாசு காரணமாக வடக்குப் பகுதியிலிருந்து வீசும் மாசடைந்த காற்றின் தாக்கம் அடுத்த இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு நாடு முழுவதும் நிலவக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் இயன்றவரை முகக்கவசம் அணியுமாறும், குறிப்பாக சுவாச நோய்கள் உள்ளவர்கள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் கொண்டவர்கள் மூச்சுத் திணறல் அல்லது சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"