யாழ்ப்பாணத்தில் நடைபெற்றதாக கூறப்படும் தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜயின் தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தில் ஏற்பட்ட சம்பவம் ஒன்று பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த ஒரு குடும்பஸ்தர், தனது நண்பர்களுடன் கோண்டாவில் பகுதியில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். விஜயின் தேர்தல் வெற்றியை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அந்த கொண்டாட்டத்தில் மது விருந்து நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
அங்கு சிலர் விஜய் குறித்து பகிடி மற்றும் கிண்டல் கருத்துகள் தெரிவித்ததால், அந்த குடும்பஸ்தர் கடும் மன உளைச்சலுக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் நிகழ்வை விட்டு வெளியேறி, தனது தந்தையின் வீட்டுக்கு சென்று தவறான முடிவெடுத்து உயிரிழந்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம், வெற்றி கொண்டாட்டம் என ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வு ஒருவரின் உயிரிழப்புக்கு காரணமானதாக மாறியதால், அந்த பகுதி மக்களிடையே பெரும் துயரத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக