BREAKING
மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் மூன்று நாள் இலங்கை பயணத்தை முடித்த மாலைதீவு ஜனாதிபதி – இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டன யாழில் விஜய் வெற்றி கொண்டாட்டத்தில் சோகம் – குடும்பஸ்தர் உயிரிழப்பு ஈரான்–அமெரிக்க பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஹோர்முஸ் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தினார் ட்ரம்ப் விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு? அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு டெல்லி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அபார வெற்றி – 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல்

கொழும்பு புறநகரில் மசாஜ் நிலையம் போர்வையில் தகாத செயற்பாடு: மூன்று பெண்கள் கைது

கொழும்பு புறநகரில் மசாஜ் நிலையம் போர்வையில் தகாத செயற்பாடு: மூன்று பெண்கள் கைது

கொழும்பின் புறநகர் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் தகாத செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்த ஒரு விடுதியை பேலியகொட பொலிஸார் சுற்றிவளைத்து மூன்று பேரை கைது செய்துள்ளனர்.

பேலியகொட பொலிஸ் பிரிவின் பண்டோலான சந்தி பகுதியில் இயங்கி வந்த குறித்த விடுதி, நேற்று முன்தினம் பிற்பகல் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கண்டறியப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, அந்த விடுதியின் முகாமையாளராக பணியாற்றிய பெண்ணும், தகாத செயற்பாட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, கஸ்எல்ல மற்றும் பகவந்தலாவ பகுதிகளை சேர்ந்த 21, 36 மற்றும் 47 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பேலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"