BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் - சிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

அல்லைப்பிட்டி துப்பாக்கிச் சூடு: உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் - சிஐடி விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி 10-ஆம் திகதி பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 17 வயதுடைய அல்ஃபினோ அருள்பாய்ஸ் என்ற சிறுவன் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பில் நீதி கோரி வரும் சிறுவனின் குடும்பத்தினர், தற்போது தங்களுக்குத் தொடர் அச்சுறுத்தல்கள் நிலவுவதாக முறைப்பாடு செய்துள்ளனர். மோட்டார் சைக்கிள்களில் வரும் சில நபர்கள் தங்களை மறைமுகமாகப் பின்தொடர்வதாகவும், அது தொடர்பான ஒளிப்படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய அலுவலகத்தில் அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, யாழ். மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணிக்கப்பட்டுள்ளார்.


தற்போது குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள பொலிஸ் பிரிவினரே இந்த அச்சுறுத்தல் குறித்தும் விசாரணை நடத்துவது முறையல்ல எனப் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரும் சட்டத்தரணிகளும் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் இதில் தலையிட வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில், சிறுவன் உயிரிழந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான பிரதான விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கும் பொருட்டு, அதனை கொழும்பு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) மாற்றி நடத்துமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"