BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மாயமான வயோதிபப் பெண் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணத்தில் பயங்கரம்: மாயமான வயோதிபப் பெண் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி இயற்றாலைப் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மகன் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், குறித்த பெண் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் திகதி வீட்டிலிருந்து வெளியேறிய அவர் மீண்டும் வீடு திரும்பாததையடுத்து, உறவினர்களால் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொலிஸாரும் ஊர் மக்களும் இணைந்து முன்னெடுத்த தேடுதலில், நேற்று (29.03.2026) மாலை மந்துவில் வன்னியாசி மதகு பகுதியிலுள்ள சிறிய காடு ஒன்றிலிருந்து அவர் எரியுண்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


குறித்த பெண் தனது வீட்டிலிருந்து இறுதியாக வெளியேறிய சிசிரிவி (CCTV) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் எனப் பிரதேச மக்கள் சந்தேகிக்கும் அதேவேளை, இது கொலையா அல்லது தற்கொலையா என்ற உண்மைத்தன்மையை அறிய கொடிகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சடலம் மீட்கப்பட்ட இடத்தில் தடயவியல் சோதனைகள் நடத்தப்பட்டு மேலதிக பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"