BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

அரச ஊழியர்களுக்கு இலட்சம் ரூபா வரை கடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கின் அதிரடி அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு இலட்சம் ரூபா வரை கடன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கின் அதிரடி அறிவிப்பு

Anura Kumara Dissanayake அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் 30 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளார். இந்த கடனில் 4 சதவீத வட்டியை அரசாங்கமே ஏற்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, அரச ஊழியர்கள் வீடுகள் நிர்மாணிப்பதற்கும், பாதைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களை ஆதரிக்கும் நோக்கில் 96,000 மில்லியன் ரூபா சலுகை அடிப்படையிலான கடன்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமிய இளைஞர்கள் தங்கள் தொழில் திட்டங்களை முன்வைத்து வங்கிகள் வழியாக நிதி பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச சேவையை வலுப்படுத்தும் வகையில் 73,000 பேரை அரச சேவைக்கு இணைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 23,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளதுடன், 10,000 பேர் பொலிஸ் துறைக்கு இணைக்கப்பட உள்ளனர்.

டிட்வா சூறாவளி தாக்கத்தின் போது கூடுதலாக 50,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், இழப்பீடு வழங்கும் தொகைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நிதி திறைசேரியில் இருந்தே பயன்படுத்தப்பட்டதாகவும், பணம் அச்சிடப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், அரச ஊழியர்களின் சம்பள உயர்விற்காக இந்த ஆண்டு 11,000 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பொருளாதார வளர்ச்சி கிராமங்களுக்கு வரை சென்றடைய பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

வறுமையை ஒழிப்பது சமூகப் பொறுப்பாகும் என்றும், பொருளாதார நன்மைகள் மக்களை நேரடியாக சென்றடைய வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"