BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

தனிக்கட்சி ஆட்சியை நிறுவ அரசாங்கம் முயற்சி - சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு

அரசாங்கம் தனிக்கட்சி ஆட்சியை நிறுவுவதற்கு முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதன் ஒரு பகுதியாக இளைஞர் மன்றங்கள் முதல் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் வரையிலான பல்வேறு அமைப்புகளுக்கான நியமனங்கள் ஜனநாயக முறையில் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், அரசாங்கம் ஜனநாயகத்தை சீர்குலைப்பதற்கும் நீதிமன்றங்களின் சுயாதீனத்தன்மையை பாதிப்பதற்கும் முயற்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

22ஆம் அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும் தனிக்கட்சி ஆட்சி முறையை முன்னெடுக்கும் உள்நோக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளதாக சஜித் பிரேமதாச மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"