நடிகர் விஜய்யின் மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய், தனது குடும்பத்தின் இலங்கை பூர்வீகம் மற்றும் யாழ்ப்பாணத்துடனான தொடர்பு குறித்து நேர்காணல் ஒன்றில் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தனது தாயார் இலங்கையின் வடக்குப் பகுதியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர் அங்கு பிறந்து வளர்ந்த பின்னர் குடும்பத்துடன் வெளிநாட்டில் குடியேறியதாகவும் ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இலங்கையுடனான தனது குடும்பத் தொடர்பு குறித்து பேசிய அவர், இலங்கைக்கு செல்லும் போது தனது தாத்தாவின் சொத்துகளில் ஒன்று குடும்பத்தின் கடந்த காலத்தை நினைவூட்டும் முக்கியமான இடமாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்திற்காக இலங்கையை படப்பிடிப்புத் தளமாக பயன்படுத்துவது குறித்து பரிசீலித்ததாகவும், அதற்கான இடங்களை பார்வையிட தனது படக்குழுவினர் இலங்கைக்கு சென்றிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்தத் திட்டம் பின்னர் கைகூடவில்லை. இருப்பினும், எதிர்காலத்தில் இலங்கையில் படப்பிடிப்பு நடத்தி, அந்நாட்டின் இயற்கை அழகையும் சிறப்பையும் தனது திரைப்படத்தின் மூலம் வெளிப்படுத்த விரும்புவதாக ஜேசன் சஞ்சய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரது தாயார் சங்கீதா யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட லண்டன் வாழ் புலம்பெயர் தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக