இரத்மலானை ஸ்ரீ ஞானேந்திர வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த வீட்டின் மீது இரண்டு கைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று வெடித்துள்ளதுடன், மற்றொன்று வெடிக்காமல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், வீடு அல்லது சுற்றுப்புறச் சொத்துகளுக்கு குறிப்பிடத்தக்க சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றதுடன், தாக்குதலை மேற்கொண்டவர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளும் தொடர்ந்துவருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக