சீனாவின் வடமேற்கு மாகாணமான கிங்ஹாயின் ஜங்ஹாய் (Xinghai) பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 28, 2026) காலை அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. காலை 11:16 மணிக்கு 5.7 ரிச்டர் அளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதனைத் தொடர்ந்து 18 நிமிடங்களுக்குப் பிறகு (11:34 மணிக்கு) அதே பகுதியில் 5.8 ரிச்டர் அளவில் இரண்டாவது நிலநடுக்கம் தாக்கியதாகச் சீன நிலநடுக்க வலையமைப்பு மையம் (CENC) தெரிவித்துள்ளது.
இரண்டு நிலநடுக்கங்களும் தரைப்பகுதியிலிருந்து 10 கி.மீ (6.2 மைல்) ஆழத்தில் மையம் கொண்டிருந்தன. கிங்ஹாய் மாகாணத்தின் தலைநகரான ஸீனிங்கிலிருந்து (Xining) சுமார் 244 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் நடமாட்டம் குறைந்த பீடபூமிப் பகுதியில் இந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்ட போதிலும், ஸீனிங் நகரம் வரை இதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் உயிரிழப்புகளோ அல்லது பாரிய கட்டிடச் சேதங்களோ இதுவரை பதிவாகவில்லை எனத் தெரிவித்துள்ள அதிகாரிகள், முதற்கட்ட மீட்புக் குழுக்களை அப்பகுதிக்கு அனுப்பி நிலைமையைக் கண்காணித்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக