BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

டுபாயில் சிக்கிய பாதாள உலகப் புள்ளிகள்: மங்களவின் செயலாளரின் கொலை வழக்கின் முக்கிய நபர் உட்பட மூவர் கைது! - மீட்டு வர விரைந்தது பொலிஸ் படை.

டுபாயில் சிக்கிய பாதாள உலகப் புள்ளிகள்: மங்களவின் செயலாளரின் கொலை வழக்கின் முக்கிய நபர் உட்பட மூவர் கைது! - மீட்டு வர விரைந்தது பொலிஸ் படை.

இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலைச் சம்பவங்கள் மற்றும் மோசடி நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த பாதாள உலகக் கும்பலைச் சேர்ந்த இருவரும், பெண் ஒருவரும் டுபாயில் வைத்து அந்நாட்டுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை புலனாய்வுத் துறையினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில், சர்வதேச பொலிஸாரின் (Interpol) உதவியுடன் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

'சூட்டி மல்லி' (Chooti Malli):
முன்னாள் அமைச்சர்
மங்கள சமரவீரவின் தனிப்பட்ட செயலாளர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலகக் கும்பலின் தலைவரான 'கொண்ட ரஞ்சித்' (Konda Ranjith) என்பவரின் மிக நெருங்கிய சகாவே இந்த 'சூட்டி மல்லி' ஆவார். இவரே முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படுகிறார்.

எல்பிட்டிய கொலைச் சந்தேக நபர்:
எல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பாதாள உலகக் குழுத் தலைவரான
'புன்சா' (Punsha) என்பவரின் முக்கிய சகாவும் இவர்களில் அடங்குகிறார்.

பெண் சந்தேக நபர்:
இவர்களுடன் இணைந்து பாரிய நிதி மோசடிக் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெண் ஒருவரும் டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை:
கைது செய்யப்பட்ட மூவரையும் சட்ட ரீதியாக இலங்கைக்கு அழைத்து வருவதற்காக,
இரண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 6 பேர் கொண்ட விசேட பொலிஸ் குழு ஒன்று டுபாய்க்கு விரைந்துள்ளது. இவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"