BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

ஸ்டான்ஃபோர்ட் பட்டமளிப்பு விழாவில் சுந்தர் பிச்சை உரையின்போது மாணவர்கள் வெளிநடப்பு: பின்னணியில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கலந்து கொண்ட அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இடம்பெற்ற மாணவர் வெளிநடப்பு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுளின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தார்.

அவர் தனது உரையை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சுமார் 200 மாணவர்கள் அரங்கில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பட்டமளிப்பு ஆடைகளை அணிந்திருந்த மாணவர்கள் வெளிநடப்பு செய்தபோது பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக முழக்கமிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நடவடிக்கையின் பின்னணியில், கூகுள் மற்றும் அமேசான் நிறுவனங்கள் இஸ்ரேலுடன் மேற்கொண்டுள்ள ‘ப்ராஜெக்ட் நிம்பஸ்’ என்ற ஒப்பந்தம் தொடர்பான எதிர்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கிளவுட் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்த ஒப்பந்தம், இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவாக அமையக்கூடும் என சில மாணவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், போர் சூழ்நிலைகளில் பெருநிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதாக கருதப்படும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கத்திலும் இந்த வெளிநடப்பு முன்னெடுக்கப்பட்டதாக மாணவர் தரப்பினர் கூறியுள்ளனர்.

இதனிடையே, நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் மாணவர்களின் வெளிநடப்பு குறித்து செய்தியாளர்கள் சுந்தர் பிச்சையிடம் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அதுகுறித்து அவர் எந்தவித கருத்தையும் வெளியிடாமல் அங்கிருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களிலும் கல்வி மற்றும் தொழில்நுட்ப வட்டாரங்களிலும் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"