BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

சுரங்கப் பாதையை புறக்கணித்தால் அபராதம்: கண்டி மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

சுரங்கப் பாதையை புறக்கணித்தால் அபராதம்: கண்டி மக்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை

கண்டி நகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் பாதசாரி விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில், சுரங்கப் பாதைகள் மற்றும் பாதசாரி கடவைகளை பயன்படுத்தாமல் பிரதான வீதிகளை கடக்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பொலிஸார் தீர்மானித்துள்ளனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக கோடிக்கணக்கான செலவில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதைகளை புறக்கணிக்கும் நடவடிக்கைகள், நகரின் போக்குவரத்து ஒழுங்கை பாதிப்பதோடு உயிர் ஆபத்துகளையும் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனையடுத்து, கண்டி நகரின் முக்கிய பகுதிகளில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளதுடன், சட்டத்தை மீறி வீதிகளை கடக்கும் நபர்களுக்கு அபராதம் விதிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நகரின் பாதுகாப்பையும் ஒழுங்கையும் உறுதிப்படுத்தும் இந்த நடவடிக்கை, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"