அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் அமைப்பு, விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் பிற பாதுகாப்பு கட்டமைப்புகள் ஏற்கனவே பெருமளவில் அழிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த நிலையைத் தொடர்ந்து அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மேலும் கடுமையான தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவரது பதிவில், எதிர்காலத்தில் ஈரானின் முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்கள் உள்ளிட்ட பகுதிகள் குறிவைத்து நடவடிக்கைகள் எடுக்கப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் மையங்கள் தொடர்பிலும் திட்டங்கள் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வெனிசுலா போன்ற நாடுகளுடன் மேற்கொள்ளப்பட்ட அணுகுமுறையைப் போலவே ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளில் முழுமையான கட்டுப்பாடு ஏற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் மேலும் தீவிரமடையக்கூடும் என அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக