கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். தற்போதைய அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பியதாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனில், முன்னாள் ஆட்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தாமதமின்றி முன்னெடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவைக் கைது செய்வது சிக்கலான விடயம் அல்ல என்றும், 24 மணித்தியாலங்களுக்குள் கூட அதனைச் செய்ய முடியும் என்றும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். மேலும், மக்களுக்கு நீதி வழங்கப்படாமல் அரசாங்கத்தின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, அரசாங்கம் தனது கடமையை நிறைவேற்றும் போது மட்டுமே மக்கள் நம்பிக்கை அதிகரிக்கும் என்றும், சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக