BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு

நாவலப்பிட்டியில் மரம் முறிந்து விழுந்து கோர விபத்து பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழப்பு

கண்டி மாவட்டம் நாவலப்பிட்டி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட துயரச் சம்பவத்தில், பிரதான வீதிக்கு அருகிலிருந்த பெரிய மரம் ஒன்று திடீரென முறிந்து முச்சக்கர வண்டி மீது விழுந்ததில் பாடசாலை மாணவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி நாவலப்பிட்டி - மாப்பாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது காலை சுமார் 6.45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மாணவன், அவரது தாய் மற்றும் மற்றொரு பெண் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனத்தின் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவத்தையடுத்து நாவலப்பிட்டி காவல்துறையினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மரத்தின் கீழ் சிக்கியிருந்த சடலங்களை மீட்டு நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுப்பி வைத்துள்ளனர்.

பிரதேசவாசிகள் கூறுகையில், நீண்ட காலமாக பழுதடைந்த நிலையில் இருந்த யூகலிப்டஸ் மரத்தை அகற்றுமாறு பலமுறை கோரப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படாததாலேயே இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாக குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"