BREAKING
சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு சாப்பிட்டவுடன் தூங்குகிறீர்களா? நெஞ்செரிச்சல் முதல் நீரிழிவு வரை ஏற்படும் பாதிப்புகள் குறித்து எச்சரிக்கை! புதனின் இரட்டை பெயர்ச்சி! செப்டம்பரில் இந்த 3 ராசிகளுக்கு தொட்டதெல்லாம் பொன்னாகும் எதிர்பார்ப்பை ஏமாற்றிய ‘டாக்சிக்’! 8 நாட்களில் ரூ.325 கோடி வசூல் – பாக்ஸ் ஆபிஸில் தொடரும் சரிவு அநுரவை விமர்சித்த அசாத் சாலி விரைவில் கைது செய்யப்படலாம்? - ஷிரான் பாசிக் தொடர்பு குறித்தும் தகவல் வவுனியாவில் சோளம் வாங்கச் சென்றவருக்கு நேர்ந்த சோகம் - விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

படகில் இருந்து கடலில் விழுந்த அதிபர் உயிரிழப்பு ; நயினாதீவில் சோக சம்பவம்

படகில் இருந்து கடலில் விழுந்த அதிபர் உயிரிழப்பு ; நயினாதீவில் சோக சம்பவம்

யாழ்ப்பாணம் நயினாதீவு – குறிகட்டுவான் பகுதியில் இடம்பெற்ற துயர சம்பவத்தில், பாடசாலை அதிபர் ஒருவர் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். நயினாதீவை பூர்வீகமாகக் கொண்ட நடராசா மயூரன் என்ற அதிபரே இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

தகவல்களின் படி, அதிபரும் மற்றுமொரு ஆசிரியரும் வழக்கமான பயணிகள் படகை தவறவிட்டதையடுத்து, கடற்தொழிலாளி ஒருவரின் சிறிய படகில் குறிகட்டுவான் நோக்கி பயணித்துள்ளனர். கடற்காற்று காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்பட்ட நிலையில், படகு கடல் அலைகளால் பலமாக அசைந்ததால் அதிபர் நிலைதடுமாறி கடலில் விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக படகோட்டி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட போதிலும், அவரை காப்பாற்ற முடியவில்லை. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த நடராசா மயூரன், புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையின் முன்னாள் அதிபராகவும், தற்போது நயினாதீவு கணேச மகா வித்தியாலயத்தின் அதிபராகவும் பணியாற்றி வந்துள்ளார். கல்வி மற்றும் சமூக சேவைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பால், அவரது இழப்பு நயினாதீவு மற்றும் புங்குடுதீவு மக்களிடையே பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"