BREAKING
புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம் புறப்படுவதற்கு முன் விபத்து; Lufthansa Dreamliner விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கொழும்பின் பல பகுதிகளில் திடீர் நீர் விநியோகத் தடை: இரவு 8 மணி வரை பொதுமக்களுக்கு அறிவிப்பு ஈரான் மீது அறிவிக்கப்படாத போர் முடிவடைந்ததா? மத்திய கிழக்கின் புதிய அதிகாரச் சமநிலையை ஆராயும் பார்வை எரிபொருள் நிலையத்தில் பரபரப்பு; QR குறியீடு விவகாரத்தில் ஊழியர் மீது தாக்குதல் "உலகப் போரை காரணம் காட்டி அரசின் தோல்விகளை மறைக்க முடியாது" – முஜிபுர் ரஹ்மான் கடும் விமர்சனம்

"ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு நேர்ந்த அவமானம்": நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தல் - கதறி அழுத விஜயா!

"ஸ்ருதி வீட்டில் விஜயாவிற்கு நேர்ந்த அவமானம்": நடனம் ஆடச் சொல்லி வற்புறுத்தல் - கதறி அழுத விஜயா!
விஜய் டிவியின் முன்னணி சீரியலான 'சிறகடிக்க ஆசை' தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. மனோஜ் செய்த தவற்றால் வீட்டை இழந்து நடுத்தெருவிற்கு வந்த அண்ணாமலை, மீனா வீட்டில் மரியாதையுடன் நடத்தப்படுகிறார். ஆனால், வசதியான வாழ்க்கைக்காக ஸ்ருதி வீட்டிற்குச் சென்ற விஜயாவிற்கு அங்குப் பெரும் சோகம் காத்திருக்கிறது. ஸ்ருதி வீட்டில் அவருக்கு முறையான உணவோ, காபியோ வழங்கப்படாததுடன், விஜயாவைப் பூட்டி வைத்துவிட்டு ஸ்ருதியின் பெற்றோர் வெளியே செல்கின்றனர். இதனால் மனமுடைந்த விஜயா, தன் தோழி பார்வதி வீட்டிற்குச் செல்ல முயல, "கணவனுடன் வந்தால் மட்டுமே அனுமதி" என அவர் முகத்தில் அடித்தாற்போல் கூறிவிடுகிறார். அடுத்த வார ப்ரோமோவில், ஸ்ருதி வீட்டிற்கு வரும் நண்பர்கள் மது அருந்திவிட்டு விஜயாவை நடனம் ஆடுமாறு வற்புறுத்துகின்றனர். ஸ்ருதியின் அம்மாவும் விஜயாவை ஆடும்படி வற்புறுத்த, வேறு வழியின்றி அவர் கடும் மனவேதனையும் அவமானமும் அடைகிறார். இறுதியில் தன் அறைக்குச் சென்று கதறி கதறி அழுவதுடன், அண்ணாமலையைப் பிரிந்து வந்ததற்காக வருத்தப்படுகிறார். விஜயாவின் இந்த வீழ்ச்சியைப் பார்த்த ரசிகர்கள், "தன் வினை தன்னைச் சுடும்" எனச் சமூக வலைதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்த எபிசோடுகளில் விஜயா மீண்டும் அண்ணாமலையிடம் தஞ்சமடைவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"