BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

வவுனியாவில் பயங்கரம்: சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான வயதுப் பெண் பலி!

வவுனியாவில் பயங்கரம்: சகோதரனின் கத்திக்குத்துக்கு இலக்கான வயதுப் பெண் பலி!

வவுனியா, சொக்கடிப்புளவு கிராமத்தில் நேற்று (08.04.2026) இரவு இடம்பெற்ற குடும்பத் தகராறில் பெண் ஒருவர் தனது சகோதரனாலேயே கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் சகோதர முறையானவர், மதுபோதையில் இருந்த நிலையில் கத்தியால் தாக்கியதில் இப்பெண் படுகாயமடைந்துள்ளார்.


உடனடியாக அங்கிருந்தவர்களின் உதவியுடன் அவர் வவுனியா பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த பூவரசங்குளம் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்ததுடன், கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர். இந்தக் கொலைக்கான பின்னணி அல்லது துல்லியமான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"