BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் () கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் () கைதிக்கு பிறந்தநாள் கொண்டாட்டம்: பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடும் ஒழுக்காற்று நடவடிக்கை!

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கனேமுல்ல சஞ்சீவவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி என்பவருக்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) அலுவலகத்திற்குள் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொலிஸ் பாதுகாப்பில் உள்ள ஒரு கைதிக்கு இவ்வாறான சலுகைகள் வழங்கப்பட்டமை பொலிஸ் ஒழுக்கவிதிகளுக்கு முரணானது எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நேரடியாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு விஜயம் செய்து முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.


இது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப்.யு. வூட்லர், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவொன்றின் மூலம் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக, இந்தச் சட்டவிரோதச் செயலுக்கு அனுமதி அளித்த அல்லது உடந்தையாக இருந்த குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. "பொலிஸ் அதிகாரிகள் அரச அதிகாரிகளாவர்; அவர்கள் குற்றவாளிகளுடன் எவ்விதமான தனிப்பட்ட தொடர்புகளையும் பேண முடியாது" என அவர் இதன்போது கடுமையாக எச்சரித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"