BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

நாடு முழுவதும் நீர் விநியோகம் குறைக்கப்படக்கூடும்: நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

நாடு முழுவதும் நீர் விநியோகம் குறைக்கப்படக்கூடும்: நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்புச் சபை எச்சரிக்கை

தற்போது நிலவும் கடுமையான வானிலை காரணமாக, நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருவதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்போது பொதுமக்களிடம், நீரை வீணாக்காமல், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அளவுக்கு அதிகமாக நீரை பயன்படுத்தினால், உயரமான பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் குழாய் ஊடாக நீர் பெறும் இறுதி முனைகளில் நீரின் அழுத்தம் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் வரட்சியான நிலை மேலும் மோசமடைந்தால், எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

இதனால், தடையின்றி நீர் விநியோகம் நடைபெற பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என சந்தன பண்டார வலியுறுத்தியுள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"