BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

வயதிற்கு மேற்பட்டோருக்கு 'அஸ்வெசும' கொடுப்பனவு: இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!

வயதிற்கு மேற்பட்டோருக்கு 'அஸ்வெசும' கொடுப்பனவு: இன்று முதல் வங்கிக் கணக்குகளில் வரவு!

இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ், தகுதியுடைய சிரேஷ்ட பிரஜைகளுக்கான மார்ச் மாதக் கொடுப்பனவுகளை வழங்கும் பணிகள் இன்று (26) ஆரம்பமாகியுள்ளன. இதன்படி, முதற்கட்டமாக 70 வயதிற்கு மேற்பட்ட 622,462 முதியோர்களுக்கு இந்தக் கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக அரசாங்கம் 3.1 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதுடன், பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நிதி நேரடியாக வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.


தொடர்ந்து இரண்டாம் கட்டத்தின் கீழ், தகுதிபெற்ற மேலும் 71,339 முதியோர்களுக்கு மொத்தம் 356 மில்லியன் ரூபாய் வழங்கப்படவுள்ளது. தகுதியுடைய முதியோர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இன்று முதல் தத்தமது வங்கிக் கணக்குகளின் ஊடாக இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சிரேஷ்ட பிரஜைகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"