ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார, யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்ட போது, நல்லூர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
அவரது இந்த விஜயம் நேற்றைய தினம் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் பின்னர் யாழ். நகரில் உள்ள ரிக்கோ தனியார் விடுதியில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் புத்திஜீவிகளை இணைத்து, அமரர் டி எஸ் சேனநாயக்க தலைமையில் அரசியல் பீட செயல் அமர்வு நடைபெற்றது. அதன் பின்னர் ஊடகவியலர்களுக்கான சந்திப்பு நடைபெற்றது.
குறித்த நிகழ்வில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பிரதான அமைப்பாளர் அனோஜன், மற்றும் தொகுதி அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக