BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

நாமலின் பிரித்தானிய பயணம் குறித்து ரணில் கேள்வி இரகசிய பேச்சு பேசுபொருள்

நாமலின் பிரித்தானிய பயணம் குறித்து ரணில் கேள்வி இரகசிய பேச்சு பேசுபொருள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் அவரது பிரித்தானிய பயணம் குறித்து கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்கள் குரல் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கருத்தரங்கு ஒன்று கடந்த வாரம் இலங்கை அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது இருவருக்கும் இடையில் இந்த உரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

நிகழ்வின் போது நாமல் ராஜபக்ச அமர்வதற்குத் தயாரான போது, ரணில் விக்ரமசிங்க அவரை நோக்கி இங்கே அமருங்கள் எனக் கூறி தனது அருகிலிருந்த ஆசனத்தை காட்டியுள்ளார்.

ஆனால் அந்த ஆசனத்தில் ஏற்கனவே பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் அமர்ந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து நாமல் ராஜபக்சவின் அண்மைய ஒக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கு மேற்கொண்ட பயணம் குறித்து ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதற்கு பதிலளித்த நாமல் ராஜபக்ச தனது பயண அனுபவங்களை அவரிடம் விளக்கியுள்ளார். இதன் போது ரணில் விக்ரமசிங்க நாமலின் காதில் இரகசியமாக ஏதோ ஒன்றை கூறியதாகவும், அதற்கு நாமல் புன்னகையுடன் பதிலளித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இருவருக்கிடையிலான நெருக்கமான உரையாடல் அங்கிருந்த அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கருத்தரங்கு நிறைவடைந்த பின்னர் ஊடகவியலாளர்கள் நாமல் ராஜபக்சவிடம் ரணில் விக்ரமசிங்க கூறிய இரகசியம் என்ன எனக் கேட்டபோது, அது ஒரு இரகசியம் என புன்னகையுடன் பதிலளித்து அவர் அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"