BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

நீதிமன்ற விசாரணைகள் நிறைவு: பாரியளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று தீயிட்டு அழிப்பு!

நீதிமன்ற விசாரணைகள் நிறைவு: பாரியளவிலான போதைப்பொருள் கையிருப்பு இன்று தீயிட்டு அழிப்பு!
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் பல்வேறு சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் நிறைவடைந்த பெருமளவிலான போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் இன்று (13.03.2026) காலை முன்னெடுக்கப்படவுள்ளன. இதன்படி, 40 கிலோகிராம் 533 கிராம் ஹெரோயின், 132 கிலோகிராம் 79 கிராம் கஞ்சா, 55 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,482 போதை மாத்திரைகள் இவ்வாறு தீயிட்டு அழிக்கப்படவுள்ளன.

 போதைப்பொருள் கையிருப்பு இன்று அதிகாலை 6.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம், வன்னதவில்லுவ - லெப்டோவத்த பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நிறுவப்பட்டுள்ள நவீன தகன உலை மூலம் இன்று காலை 9.00 மணியளவில் இவை அனைத்தும் முழுமையாக அழிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"