BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

தேசிய மின் கட்டமைப்பில் கோளாறு: நாட்டின் பல பகுதிகளில் மின்தடை!

தேசிய மின் கட்டமைப்பில் கோளாறு: நாட்டின் பல பகுதிகளில் மின்தடை!
புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகப் பாதைகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறினால் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியின் அதிர்வெண்ணில் (Frequency) ஏற்பட்ட மாற்றம் காரணமாக, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் நீராவி விசையாழி (Steam Turbine) செயலிழந்து கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதிக்குக் கிடைக்க வேண்டிய 55 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவு இழக்கப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மின்சார சபை பொறியியலாளர்களின் துரித நடவடிக்கையினால் சில நிமிடங்களிலேயே நிலைமை சீர்செய்யப்பட்டு, மின் விநியோகம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக மின்சார சபை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"