Laugfs Gas PLC நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயுத் தொகுதியை ஏற்றிய கப்பல் இன்று (28) இலங்கையை வந்தடைந்துள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, இன்றைய தினத்திலிருந்து குறித்த எரிவாயுத் தொகுதிகள் சந்தைக்கு துரிதமாக விநியோகிக்கப்படும் என நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிலவிய எரிவாயு பற்றாக்குறை காரணமாக ஏற்பட்ட சிரமங்களுக்கு தீர்வு காணும் வகையில் இந்த இறக்குமதி மேற்கொள்ளப்பட்டதாகவும், விநியோக நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வீட்டுப் பாவனையாளர்கள் இன்றைய தினத்திலிருந்து வழமை போன்று லாஃப்ஸ் எரிவாயு விற்பனை முகவர்கள் ஊடாக தேவையான சமையல் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்டிருந்த இடையூறுகள் விரைவில் சரியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக