BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

இலங்கை சுற்றுலாவின் புதிய சாதனை: -இல் . மில்லியன் பயணிகள் - இந்தியாவே முதலிடம்!

இலங்கை சுற்றுலாவின் புதிய சாதனை: -இல் . மில்லியன் பயணிகள் - இந்தியாவே முதலிடம்!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) சமீபத்திய சந்தை பகுப்பாய்வு அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டு இலங்கைக்கு 2.3 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். இதில் அண்டை நாடான இந்தியா, 531,511 பயணிகளுடன் (சுமார் 23%) முதலிடத்தைப் பிடித்துள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் பொழுதுபோக்கிற்காக வருகை தந்த போதிலும், அவர்களின் தினசரி சராசரிச் செலவு 176.49 டொலர்களாக மட்டுமே காணப்படுகிறது. இதேபோல் பங்களாதேஷ் பயணிகளின் செலவினம் மேலும் குறைவாக, அதாவது 129.28 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

எண்ணிக்கை அடிப்படையில் ஆசிய நாடுகள் முன்னிலை வகித்தாலும், இலங்கைக்கு அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றுத் தரும் சந்தையாக ஐரோப்பிய நாடுகள் விளங்குகின்றன. குறிப்பாக, 212,277 பயணிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ள பிரித்தானியாவின் சுற்றுலாப் பயணி ஒருவர் நாளொன்றுக்குச் சராசரியாக 263.38 டொலர்களைச் செலவிடுகின்றார். அதேவேளை, சீனா, ரஷ்யா மற்றும் இந்தியப் பயணிகளிடம் இருந்து தரவுகளைச் சேகரிப்பதில் சவால்கள் நிலவுவதாகவும், பலர் தங்களது பயணத் தகவல்களைச் சரியாக வழங்கவில்லை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இதன் காரணமாக, அண்டை நாடுகளின் வருகையைத் தக்கவைத்துக்கொண்டு, அதிக வருமானம் ஈட்டித்தரும் மேற்கத்திய நாடுகளைக் கவரும் 'இரட்டை சந்தை மூலோபாயத்தை' (Double Market Strategy) இலங்கை பின்பற்ற வேண்டும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"