BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம்

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் அளவெட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இரு இளைஞர்கள் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டனர். அவர்களின் உடைமைகளை சோதனை செய்த போது ஐஸ் வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், அந்த போதைப்பொருளை விற்பனை செய்த நபர் தொடர்பான தகவல் வெளிப்பட்டதையடுத்து மூன்றாவது நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட மூவரிடமிருந்தும் சுமார் 2 கிராம் 380 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

இவர்கள் தற்போது தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. போதைப்பொருள் வியாபாரம் தொடர்பான இந்த சம்பவம் யாழ் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"