BREAKING
இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம் இலங்கையின் பிரபல வங்கியில் 10 மில்லியன் ரூபா நிதி மோசடி – வாடிக்கையாளர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் பாம்புகள் உண்மையில் பால் குடிக்குமா? – புற்றில் பால் ஊற்றும் பழக்கத்தின் அறிவியல் விளக்கம் முன்பள்ளிகளுக்கு கட்டாய பதிவு அறிவிப்பு – ஜூலை 1க்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவு நீதித்துறை சுதந்திரம் குறித்து சர்ச்சை – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மீது விசாரணை கோரிக்கை சீன பட்டாசு தொழிற்சாலையில் பெரும் வெடிவிபத்து – 21 பேர் பலி, 61 பேர் காயம்

யாழில் வாந்தியுடன் ஏற்பட்ட துயரம் வயது சிறுமி உயிரிழப்பு

யாழில் வாந்தியுடன் ஏற்பட்ட துயரம் வயது சிறுமி உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வயிற்றுவலி மற்றும் வாந்தி காரணமாக பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தை சேர்ந்த முகமது ஜிஹாட் பவிஹா என்ற சிறுமி கடந்த 13ஆம் திகதி முதல் வயிற்றுவலி மற்றும் வாந்தியால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த அவர், பின்னர் நிலைமை மோசமடைந்ததால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

உடற்கூற்று பரிசோதனையில், குடல்வளரி காரணமாக ஏற்பட்ட வயிற்றுவலியால் வாந்தி ஏற்பட்டதும், அந்த வாந்தி சுவாசக் குழாயினுள் சென்றதால் மரணம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து திடீர் மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"